துப்பாக்கியில் துள்ளிக்குதித்து விளையாடிய வளர்ப்பு நாய்... உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்

துப்பாக்கியில் துள்ளிக்குதித்து விளையாடிய வளர்ப்பு நாய்... உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்
துப்பாக்கியில் துள்ளிக்குதித்து விளையாடிய வளர்ப்பு நாய்... உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. சமீபத்தில்கூட அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், அமெரிக்க இளைஞர் ஒருவர் தன் வளர்ப்பு நாய் சுட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் கனாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜோசப் ஸ்மித். பிளம்பரான இவர், வேட்டையாடுவதை விருப்பமாகக் கொண்டிருந்திருக்கிறார். அதன்பேரில், கடந்த 21ஆம் தேதி தன் வளர்ப்பு நாயுடன் வேட்டைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது தன் காரை, முன் இருக்கையில் அமர்ந்து ஜோசப் ஓட்டிச் செல்ல, பின் இருக்கையில் நாய் இருந்துள்ளது. அதே இருக்கையில் வேட்டைக்கான துப்பாக்கியும் இருந்துள்ளது. அந்த நாய் எதிர்பாராத விதமாக துப்பாக்கி மீது ஏறிக் குதித்துள்ளது. அப்போது துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு, காரை ஓட்டிக்கொண்டிருந்த ஜோசப் மீது பாய்ந்துள்ளது.

இதில் ஜோசப் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய சம்னர் கவுண்டி ஷெரிப் காவல் துறையினர், “துப்பாக்கி மீது நாய் ஏறி விளையாண்டதால், குண்டு வெளியேறி அவர் உயிர் பிரிந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2022ஆம் ஆண்டில் மட்டும் 648 துப்பாக்கிச்சூடு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com