நியூசி. துப்பாக்கிச்சூடு: ஒரு பெண் உட்பட 4 பேர் கைது!

நியூசி. துப்பாக்கிச்சூடு: ஒரு பெண் உட்பட 4 பேர் கைது!
நியூசி. துப்பாக்கிச்சூடு: ஒரு பெண் உட்பட 4 பேர் கைது!

நியூசிலாந்தில், இரண்டு மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, ஒரு பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் ஹாக்லே பூங்கா அருகே, மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதி உள்ளது. இன்று வெள்ளிக் கிழமை என்பதால், இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வரும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்களில் சிலரும் அங்கு தொழுகை நடத்த சென்றனர். அப்போது அங்கு பயங் கரமாக துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. இதில் பலர் காயமடைந்தனர். சிலர் தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து அங்கிருந்து பங்களாதேஷ் வீரர்கள் தப்பி, ஓட்டலுக்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர். இந்த துப்பாக்கிச் சுடு சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே மற்றொரு மசூதியிலும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இயந்திர துப்பாக்கியுடன் வந்த ஒருவர் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். சுமார் 15 நிமிடம் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருந்தான். இதையடுத்து பலர் சுவர் ஏறி குதித்து உயிர் தப்பினர். இதிலும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்த விவரம் உடனடியாகத் தெரியவில்லை. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக, பங்களாதேஷ் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை நடக்க இருந்த 3 வது டெஸ்ட் போட்டி, ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, ஒரு பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசார ணை நடந்து வருகிறது. ’’இன்னும் இங்கு ஆபத்து ஓய்ந்துவிடவில்லை’’ என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com