நேபாளம்: புதிய பிரதமராக ஷேர் பகதூர் தியூபா பதவியேற்பு

நேபாளம்: புதிய பிரதமராக ஷேர் பகதூர் தியூபா பதவியேற்பு
நேபாளம்: புதிய பிரதமராக ஷேர் பகதூர் தியூபா பதவியேற்பு
நேபாளத்தின் புதிய பிரதமராக ஷேர் பகதூர் தியூபா பதவியேற்றார்.
நேபாளத்தில், கடந்த 2018-ஆம் ஆண்டு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைக்கப்பட்டு, கே.பி.ஷர்மா ஒலி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிரசாண்டா, ஒருங்கிணைந்த கட்சியின் துணைத் தலைவரானார். இரு தலைவர்களுக்கும் இடையே அதிகார போட்டி ஏற்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தை கலைத்தார் ஒலி. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நேபாள உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத்தை 7 நாட்களுக்குள் கூட்டவும், எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷேர் பகதூர் தியூபாவை பிரதமராக நியமிக்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று இரவு நேபாள குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி, ஷேர் பகதூர் தியூபாவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். தியூபா ஏற்கனவே 3 முறை நேபாள பிரதமராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தியூபா நியமனத்தை ஏற்க முடியாது எனக் கூறியுள்ள முன்னாள் பிரதமர் ஒலி, விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com