sheikh hasina will return as prime minister awami league leader says
ஷேக் ஹசீனாஎக்ஸ் தளம்

வங்கதேசம் | ”ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராவார்” - உதவியாளர் நம்பிக்கை!

”ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராவார்” என அவரது உதவியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Published on

அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க அவாமி லீக் துணைத் தலைவர் டாக்டர் ரப்பி ஆலம், வங்கதேசத்தின் தற்போதைய நிலைமை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளார், நாடு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

sheikh hasina will return as prime minister awami league leader says
ஷேக் ஹசீனாபுதிய தலைமுறை

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நெருங்கிய உதவியாளரும் அமெரிக்க அவாமி லீக் துணைத் தலைவர் டாக்டர் ரப்பி ஆலம், இதுகுறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், ”வங்கதேசம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. சர்வதேச சமூகத்தால் இதுகுறித்து விவாதிக்கப்பட வேண்டும். நமது தலைவர்கள் பலர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் இந்தப் பாதுகாப்பை வழங்கியதற்காக இந்திய அரசாங்கத்திற்கு நாங்கள் மிகவும் நன்றி கூறுகிறோம். ஷேக் ஹசீனாவுக்கு பாதுகாப்பான பயணப் பாதையை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி கூறுகிறேன். இந்திய மக்களுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்.

வங்காளதேச ஆலோசகரை பதவி விலகச் சொல்லி, அவர் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே திரும்பிச் செல்லுமாறு நாங்கள் கேட்க விரும்புகிறோம். வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா மீண்டும் வருவார். நாட்டின் இளம் தலைமுறை தவறு செய்துள்ளது. ஆனால், அது அவர்களின் தவறு அல்ல; அவர்கள் கையாளப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

sheikh hasina will return as prime minister awami league leader says
வங்கதேசம் | நாட்டிற்கு ஆபத்து.. ராணுவத் தளபதி எச்சரிக்கை!

மறுபுறம், டாக்காவில் உள்ள ஒரு நீதிமன்றம், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தன்மண்டி இல்லமான 'சுதாசதன்' (ஷேக் ஹசீனாவின் கணவரும், மறைந்த அணு விஞ்ஞானியுமான எம்.ஏ. வாஸீத் மியா, சுதா மியா என்று செல்லப்பெயர் பெற்றார். 'சுதாசதன்' என்ற வீட்டிற்கு அவரது பெயரிடப்பட்டது) மற்றும் இந்தியாவில் நாடு கடத்தப்பட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான வேறு சில சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது. அவரது குடும்பத்திற்குச் சொந்தமான 124 வங்கிக் கணக்குகளைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

sheikh hasina will return as prime minister awami league leader says
ஷேக் ஹசீனாx page

ஷேக் ஹசீனாவைத் தவிர, அவரது மகன் சஜிப் வாஸெத் ஜாய், மகள் சைமா வாஸெத் புடுல், சகோதரி ஷேக் ரெஹானா மற்றும் அவரது மகள்கள் துலிப் சித்திக் மற்றும் ரத்வான் முஜிப் சித்திக் ஆகியோருக்குச் சொந்தமான வேறு சில சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) தாரிக் அகமது சித்திக் மற்றும் முன்னாள் காவல் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (IGP) பெனாசிர் அகமது உட்பட 10 பேர் மீது கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

sheikh hasina will return as prime minister awami league leader says
வங்கதேசம் | ஷேக் ஹசீனாவின் தந்தை வீடு இடிப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com