உலகில் முதன் முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக கருதப்படும் சீனாவில், பெரும் முயற்சிக்குப் பிறகு கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், சமீப நாட்களாக சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.