பாகிஸ்தான் : எரிவாயு பைப்லைன் வெடித்த அதிபயங்கர விபத்தில் 12 பேர் பலி

பாகிஸ்தான் : எரிவாயு பைப்லைன் வெடித்த அதிபயங்கர விபத்தில் 12 பேர் பலி

பாகிஸ்தான் : எரிவாயு பைப்லைன் வெடித்த அதிபயங்கர விபத்தில் 12 பேர் பலி
Published on

பாகிஸ்தான் நாட்டில் எரிவாயு பைப்லைன் வெடித்த அதிபயங்கர வெடி விபத்தில் சுமார் 12 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது. பாதாள சாக்கடையில் ஏற்பட்ட இந்த விபத்தில் அதன் மேல் பகுதியில் அமைந்திருந்த தனியார் வங்கியில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கராச்சி நகரின் ஷேர்சா பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பாதாள சாக்கடை மூடப்பட்டிருக்க அதற்கு மேல் இந்த வங்கி கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து ஏற்பட காரணம் என்ன என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

இந்த வெடி விபத்துக்கான காரணம் கழிவுநீரில் ஏற்பட்ட மீத்தேன் வாயு கசிவா? அல்லது பாதாள சாக்கடையை ஒட்டியபடி அமைக்கப்பட்டிருந்த எரிவாயு குழாயினாலா? என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல். 

கட்டட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளார்களா என்பதை அறிந்து கொள்ளும் விதமாக தொடர்ந்து மீட்பு பணி மேற்கொண்டு வருகிறதாம் உள்ளூர் அரசு. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com