கார், பைக்குகளை விரும்பும் சேகுவேராவின் மகன்

கார், பைக்குகளை விரும்பும் சேகுவேராவின் மகன்

கார், பைக்குகளை விரும்பும் சேகுவேராவின் மகன்
Published on

தனக்கு எப்போதும் கார், பைக் போன்றவை மிகவும் பிடிக்கும் என புரட்சியாளர் சேகுவேராவின் மகன் தெரிவித்துள்ளார்.

அர்ஜெண்டைனாவில் பிறந்த சேகுவேரா, கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபா விடுதலைக்காகப் போராடினார். விடுதலைக்கு பின்னர், கியூபா நாட்டின் வெளியுறவு அமைச்சராகவும் இருந்தார். பின்னர் பொலிவியா நாட்டில் சமூக மாற்றத்தை கொண்டு வருவதற்காக, தன் நாட்டையும் வகித்த பதவியையும் தூக்கி எறிந்துவிட்டு பொலிவியா சென்றார். மிகக் குறைந்த வயதிலேயே, 1967ஆம் ஆண்டு பொலிவியா ராணுவத்தால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் சேகுவேராவின் 50ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது கடைசி மகன் எர்னெஸ்டோ கியூபாவில் இருசக்கர வாகனத்தின் மூலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு எப்போதும் கார், பைக் போன்றவைகள் மீது நாட்டம் அதிகம் என்று கூறினார். அது தன் தந்தையிடம் இருந்து வந்த குணம் என்றும் அவர் குறிப்பிட்டார். மறைந்த புரட்சியாளர் சேகுவேராவைப்போலவே, அவரது மகனும் குறுந்தாடியுடனும், சிகரெட்டுடனும் காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com