'சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து...' - உக்ரைன் பெண் எம்.பி அதிர்ச்சி புகார்

'சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து...' - உக்ரைன் பெண் எம்.பி அதிர்ச்சி புகார்
'சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து...' - உக்ரைன் பெண் எம்.பி அதிர்ச்சி புகார்

ரஷிய வீரர்கள் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்து. அவர்களின் உடல்களில் முத்திரை குத்தியுள்ளனர் என உக்ரைன் பெண் எம்.பி குற்றஞ்சாட்டி உள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய படையினர் கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல்  தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைன் ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இத்ற்கிடையே ரஷ்ய படைகள் அப்பாவி மக்களை கொல்வதாகவும், போர் விதிகளை மீறி போர் குற்றத்தில் ஈடுபடுவதாகவும்  உக்ரைன் நாட்டு தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் உக்ரைன் பெண் எம்.பி. லெசியா வாசிலென்க், தனது ட்விட்டர் பதிவில் ரஷிய வீரர்கள் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பெண்களின் உடலில்  முத்திரை குத்துவதாகவும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''ரஷ்ய வீரர்கள் கொள்ளையடித்தனர். பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தனர், கொலை கூடச் செய்தனர். 10 வயது சிறுமிக்குக் கூட மலக்குடல் பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. சில சிறுமிகளுக்கு ஸ்வஸ்திகா முத்திரை போன்ற வடிவில் தீக்காயங்களும் உள்ளன. ரஷ்ய ராணுவம் தான் இதைச் செய்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com