உக்ரைனின் மரியபோல் நகரை முற்றுகையிட்ட ரஷ்யாவின் ராணுவத்தால் 5 ஆயிரம் பேர் பலி

உக்ரைனின் மரியபோல் நகரை முற்றுகையிட்ட ரஷ்யாவின் ராணுவத்தால் 5 ஆயிரம் பேர் பலி

உக்ரைனின் மரியபோல் நகரை முற்றுகையிட்ட ரஷ்யாவின் ராணுவத்தால் 5 ஆயிரம் பேர் பலி
Published on

ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டதில் இருந்து, துறைமுக நகரமான மரியுபோலில் 210 குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 5,000 பேர் கொல்லப்பட்டதாக அந்நகர மேயரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

உக்ரைனில் 30 நாட்களை கடந்து ரஷ்யா போர் புரிந்து வருகிறது. உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் கடந்த சில நாட்களாக கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறது ரஷ்யா. மருத்துவமனைகள், பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மற்றும் தொழிற்சாலைகள் உட்பட மரியுபோலின் 90% கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும், 40% கட்டிடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அலுவலகம் கூறியது. ரஷ்ய முற்றுகை தொடங்குவதற்கு முன்பு சுமார் 140,000 பேர் மரியுபோலில் நகரத்தை விட்டு வெளியேறினர். சுமார் 160,000 பொதுமக்கள் இன்னும் மரியபோல் நகரத்தை விட்டு வெளியேராமல் சிக்கியுள்ளனர் என்று மேயர் அலுவலகம் அறிவித்துள்ளது. 

“மனிதாபிமானப் பேரழிவின் எல்லைக்கு அப்பாற்பட்டவர்கள் மக்கள். சிக்கியுள்ள மக்களை மரியுபோல் நகரத்திலிருந்து முற்றிலுமாக வெளியேற்ற வேண்டும்.” மேயரின் செய்தித் தொடர்பாளர் Boichenko தெரிவித்தார். "ரஷ்ய கூட்டமைப்பு எங்களுடன் விளையாடுகிறது. நாங்கள் படையெடுப்பாளர்களின் கைகளில் இருக்கிறோம்," என்று Boichenko கூறினார். 2014 இல் மாஸ்கோவால் இணைக்கப்பட்ட கிரிமியாவிற்கும், கிழக்கு உக்ரைனில் உள்ள இரண்டு பிரிவினைவாத பகுதிகளுக்கும் இடையே ஒரு தரைப்பாலத்தை உருவாக்க தடையாக இருப்பதால்தான் மரியுபோல் நகரத்தை ரஷ்யா தீவிரமாக தாக்கி வருகிறது. மரியுபோலில் 210 குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 5,000 பேர் கொல்லப்பட்டதாக அந்நகர மேயரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com