உக்ரைன் மீது ரஷ்யா போர் - பங்குச்சந்தையில் கடும் சரிவு!

உக்ரைன் மீது ரஷ்யா போர் - பங்குச்சந்தையில் கடும் சரிவு!

உக்ரைன் மீது ரஷ்யா போர் - பங்குச்சந்தையில் கடும் சரிவு!
Published on

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் சென்செக்ஸ் புள்ளிகள் சரிவைச் சந்தித்துள்ளன.

ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மேலும் 40 வீரர்களும், பொதுமக்களில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 2,702 புள்ளிகள் சரிவடைந்தது.

2,702 புள்ளிகள் சரிவடைந்து 54,529 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது சென்செக்ஸ். தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 815 புள்ளிகள் குறைந்து, 16,247 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com