ரஷ்யா தலைநகர் மாஸ்கோ அருகே அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 2 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
நாகின்ஸ்க் பகுதியில் உள்ள 9 அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ள வீட்டில் விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் மூன்று தளங்கள் இடிந்து முற்றிலும் சேதமடைந்தன. விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியுள்ளனரா என தேடும் பணி நடைபெற்று வருகிறது.