இந்த கோடீஸ்வரருடன் இரவு உணவு அருந்த ரூ.150 கோடி ! யார் அவர்?

இந்த கோடீஸ்வரருடன் இரவு உணவு அருந்த ரூ.150 கோடி ! யார் அவர்?
இந்த கோடீஸ்வரருடன் இரவு உணவு அருந்த ரூ.150 கோடி ! யார் அவர்?

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட்டுடன் (WARREN BUFFETT) இரவு உணவு அருந்துவதற்கான வாய்ப்பு 150 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 20 லட்சம் ரூபாய்க்கு தொடங்கிய இந்த ஏலம் அனல் பறக்க நடைபெற்று 150 கோடி ரூபாயில் முடிவடைந்தது.

இ பே நிறுவனம் நடத்திய இந்த ஏலத்தில் யார் வெற்றிபெற்றார் என்பது தெரிவிக்கப்படவில்லை. உலகின் மிகச்சிறந்த முதலீட்டாளர்களில் ஒருவராக கருதப்படும் வாரன் பஃபெட்டுடன் இரவு உணவு அருந்துவதற்கான ஏலம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இதில் திரட்டப்படும் தொகை தொண்டு நிறுவனங்களுக்கு சமூக சேவை பணிகளுக்காக நன்கொடையாக வழங்கப்படுகிறது. வாரன் பஃபெட்டுடன் இரவு உணவு அருந்துவதற்காக ஏலம் நடத்துவது இந்தாண்டுடன் நிறுத்திக்கொள்ளப்பட உள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com