“அமைதியான நாட்டிற்காக பிரார்த்திக்கிறேன்” - ஆப்கன் சுதந்திர தினநாளில் ரஷித் கான் ட்வீட்

“அமைதியான நாட்டிற்காக பிரார்த்திக்கிறேன்” - ஆப்கன் சுதந்திர தினநாளில் ரஷித் கான் ட்வீட்
“அமைதியான நாட்டிற்காக பிரார்த்திக்கிறேன்” - ஆப்கன் சுதந்திர தினநாளில் ரஷித் கான் ட்வீட்

ஆப்கன் நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி, அமைதியான நாட்டிற்காக பிரார்த்தனை செய்வதாக அந்நாட்டின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரஷித் கான் கூறியுள்ளார்.

தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் நாடு மீண்டும் வந்துள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் தங்களுடைய 102வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறார்கள். மிகவும் கடுமையான ஒரு வரலாற்று சூழலில் இந்த சுதந்திர தினம் அவர்களுக்கு வந்துள்ளது. தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளதாக அங்கு ஜனநாயகமற்ற ஒரு விதமான அமைதியற்ற சூழல் தற்போது நிலவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் சுதந்திர தினத்தையொட்டி ட்விட்டர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த ட்விட்டரில், “இன்று, நம்முடைய தேசம் குறித்து மதிப்பீடு செய்ய சிறிது நேரம் எடுத்துக் கொள்வோம். தியாகங்களை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். அமைதியான, மேம்பட்ட மற்றும் ஒற்றுமையான நாட்டிற்காக நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஆப்கன் நாட்டின் கொடியை அவர் முத்தமிடுவது போன்ற படத்தையும், ஆப்கன் கொடியையும் பகிர்ந்துள்ளார். கன்னத்தில் ஆப்கான் கொடியை ஸ்டிக்கர் போல் ஒட்டிய புகைப்படம் ஒன்றினையும் பகிர்ந்துள்ளார். இதற்கு முன்பும் தலிபான்கள் காபூல் நகரை கைப்பற்ற உடன் அமைதியை வலியுறுத்தி கருத்துக்களை முன் வைத்து இருந்தார்.

ஐக்கிய அமீரகம் மற்றும் ஓமனில் இந்தாண்டு அக்டோபர் - நவம்பர் மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ரஷித் கான் உள்ளிட்ட ஆப்கான் கிரிக்கெட் அணியும் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com