இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்பு

இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்பு
இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்பு

இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேவை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சவை பிரதமராக அறிவித்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேன. ராஜபக்ச பதவியேற்ற நாள் முதல் இலங்கை அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வந்தது. நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலை இருந்த போது, நாடாளுமன்றத்தை சிறிசேன அதிரடியாக கலைத்தார்.

இதனிடையே, நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனவின் உத்தரவு சட்டவிரோதமானது என்று இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்தது. அதிபர் சிறிசேன தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக அவரது மகன் நமல் ராஜபக்ச ட்விட்டரில் தெரிவித்தார். அதன்படி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்ச. அவரின் ராஜினாமாவுக்கு பிறகு மீண்டும் இலங்கை பிரதமராக ரணிலே பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகின.

இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவை நியமிக்க அதிபர் சிறிசேன ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று காலை இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

பிரதமர் ரணில் தலைமையில் நாளை  புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com