‘கேட்டலோனியா தனிநாடு கோரிக்கை’ - தலைவர்கள் கைதுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

‘கேட்டலோனியா தனிநாடு கோரிக்கை’ - தலைவர்கள் கைதுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
‘கேட்டலோனியா தனிநாடு கோரிக்கை’ - தலைவர்கள் கைதுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

ஸ்பெயினில், தனிநாடு கோரி போராடிய அமைப்புகளின் தலைவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. 

2010 ஆம் ஆண்டில் ஸ்பெயினின் அரசியல் சாசன நீதிமன்றம் கேட்டலோனியாவின் தன்னாட்சி தொடர்பான சில சட்டப் பிரிவுகளை நீக்கியதால், மீண்டும் விடுதலைப் போராட்டங்கள் தொடங்கின. கேட்டலோனியாவின் வரலாற்றையும், தனித்தன்மையையும் போற்றும் வகையில் அதைத் தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. 

இதையடுத்து நடைபெற்ற போராட்டங்களைத் தொடர்ந்து, விடுதலை தொடர்பான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் கேட்டலோனிய நாடாளுமன்றத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. தனி மொழி, பண்பாடு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் கேட்டலோனியா, ஸ்பெயினின் மொத்தப் பொருளாதார வளத்தில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டிருப்பதால், தனி நாடாக இயங்குவதில் பெருந்தடை ஏதுமிருக்காது என்ற நம்பிக்கையைப் பிரிவினை தலைவர்கள் கூறி வருகின்றனர். 

இது தொடர்பாக பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. அதில் கேட்டலோ‌னிய அமைச்சர்கள் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு 9 முதல் 13 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது‌. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்சிலோனா சாலையில் குவிந்த போராட்டக்கா‌ரர்கள், சாலையில் நின்றுகொண்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். மேலும் போராட்டத்தை ஒடுக்கிய, காவல்துறையினர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போராட்டக்காரர்கள் மீது ‌காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தினர். இதனால் பார்சிலோனா நகர் முழுவதுமே போர்க்‌களமாக காட்சியளித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com