"அணு குண்டுகளை ஒழிக்க வேண்டும்"-போப் பிரான்ஸிஸ் வேண்டுகோள்

"அணு குண்டுகளை ஒழிக்க வேண்டும்"-போப் பிரான்ஸிஸ் வேண்டுகோள்
"அணு குண்டுகளை ஒழிக்க வேண்டும்"-போப் பிரான்ஸிஸ் வேண்டுகோள்

ஜப்பான் சென்றுள்ள போப் பிரான்ஸிஸ், நாகசாகியிலுள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

1945-ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகளை வீசியது. இதில் நாகசாகியில் மட்டும் 27 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஜப்பான் சென்றுள்ள போப் பிரான்ஸிஸ்,

அணுகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அங்கு நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசிய போப் பிரான்ஸிஸ், உலக நாடுகள் அணுகுண்டுகளை ஒழிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அணுகுண்டுகள் வைத்திருப்பது மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் எதிரான குற்றம் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com