போதை பொருள் திருட்டு குறித்து போலீசில் புகார் செய்தவர் கைது

போதை பொருள் திருட்டு குறித்து போலீசில் புகார் செய்தவர் கைது

போதை பொருள் திருட்டு குறித்து போலீசில் புகார் செய்தவர் கைது
Published on

போதைபொருள் திருடுபோய் விட்டதாக புகார் தெரிவித்தவரை அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாண போலீசார் கைது செய்தனர்.

ஃபுளோரிடா மாகாணத்தில் ஒகாலூசா நகர மேயர் அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்புகொண்ட டேவிட் பிளாக்மோன் என்பவர், தன்னை போதைபொருள் விற்பனையாளர் என்று அடையாளப்படுத்திக் கொண்டார். மேலும், தனது காரில் வைக்கப்பட்டிருந்த 8 கிராம் எடை கொண்ட கோகைன் போதைபொருள் மற்றும் 50 அமெரிக்க டாலர்கள் திருடுபோய்விட்டதாகவும், அதைக் கண்டுபிடித்துத் தருமாறும் கேட்டுக்கொண்டார். 
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கோகைன் போதைப்பொருள் திருடுபோக வில்லை என்பதைக் கண்டறிந்தனர். அதுமட்டுமில்லாமல், தடை செய்யப்பட்ட போதைபொருளை வைத்திருந்ததாக டேவிட்டைக் கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com