மகிந்த ராஜபக்சே ராஜினாமாவா? - இலங்கை பிரதமர் அலுவலகம் விளக்கம்

மகிந்த ராஜபக்சே ராஜினாமாவா? - இலங்கை பிரதமர் அலுவலகம் விளக்கம்
மகிந்த ராஜபக்சே ராஜினாமாவா? - இலங்கை பிரதமர் அலுவலகம் விளக்கம்

மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியுள்ளதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.



சுற்றுலாத் துறை முடக்கம், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் மாவு போன்ற உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காத நிலை உள்ளது. இதோடு 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான பாதிப்புகளால் வெகுண்டெழுந்த மக்கள் ராஜபக்சே சகோதரர்கள் அரசிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வாகன எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு இலங்கையில் அவசர நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிரகடனப்படுத்தியுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட காரணங்களுக்காக அவசர நிலையை அறிவிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.



மேலும், இலங்கை முழுவதும் 36 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது, அரசுக்கு எதிராக மக்கள் இன்று மிகப்பெரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தநிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com