எம்.ஜி.ஆர் பிறந்த ஊர் இது: இலங்கையில் மோடி பேச்சு

எம்.ஜி.ஆர் பிறந்த ஊர் இது: இலங்கையில் மோடி பேச்சு

எம்.ஜி.ஆர் பிறந்த ஊர் இது: இலங்கையில் மோடி பேச்சு
Published on

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த ஊர் இது என்று இலங்கையில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

புத்த பூர்ணிமா கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவும், இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையைத் திறந்து வைக்கவும், தமிழர்களை சந்தித்துப் பேசவும் 2 நாள் பயணமாக, பிரதமர் மோடி இலங்கை சென்றுள்ளார். அங்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடையே பேசிய அவர், ’புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த ஊர் இது’ என்று குறிப்பிட்டார். அப்போது கூடியிருந்த தமிழர்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.

அதிமுகவை பாஜக கைப்பற்ற இருப்பதாக பேச்சு நிலவி வரும் நிலையில் எம்.ஜி.ஆர். பெயரை மோடி உச்சரித்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com