“பயங்கரவாதத்தில் ஏது நல்லது, கெட்டது” - பிரதமர் மோடி

“பயங்கரவாதத்தில் ஏது நல்லது, கெட்டது” - பிரதமர் மோடி

“பயங்கரவாதத்தில் ஏது நல்லது, கெட்டது” - பிரதமர் மோடி
Published on

பயங்கரவாதம் என்றாலே பயங்கரவாதம்தான், அதில் நல்ல பயங்கரவாதம், மோசமான பயங்கரவாதம் என எதுவும் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். 

ஏழு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற 'பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக எத்தகைய வியூகம் அமைப்பது' என்பது தொடர்பான மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதிகளுக்கு நிதி மற்றும் ஆயுதங்கள் கிடைப்பதை தடுத்தால் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார். 

உலகின் எந்தப் பகுதியில் பயங்கரவாதச் செயல்கள் நடந்தாலும் அதை நல்ல பயங்கரவாதம், மோசமான பயங்கரவாதம், குறைந்த பயங்கரவாதம் அல்லது அதிகமான பயங்கரவாதம் என்று கருதக்கூடாது என்று குறிப்பிடாது மேலும், அது அனைத்துமே பயங்கரவாதம் தான் எனவும் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com