இந்தியாவில் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் சவுதி அரேபியா

இந்தியாவில் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் சவுதி அரேபியா
இந்தியாவில் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் சவுதி அரேபியா

இந்தியா- சவுதி அரேபியா இடையிலான உறவு முன்னேற்றம் கண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபிய பயணத்தின் ஒரு பகுதியாக அங்குள்ள ஊடகத்திற்கு மோடி பேட்டி அளித்துள்ளார். அதில், பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியா- சவுதி அரேபியா நாடுகள் இடையிலான ஒத்துழைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

இந்தியாவில் சவுதி அரேபியாவின் முதலீடுகளை காண ஆர்வமுடன் இருப்பதாகத் தெரிவித்த மோடி, வாங்குவது - விற்பது என்பதோடு நில்லாமல் அடுத்தக்கட்டத்தை நோக்கி இருநாட்டு உறவுகள் சென்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் எரிசக்தி, உள்கட்டமைப்பு, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்ய இருப்பதாக கடந்த மாதம் சவுதி அரேபியா அறிவித்திருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com