அமெரிக்காவில் ஜெபக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பரிதாப பலி!

அமெரிக்காவில் ஜெபக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பரிதாப பலி!
அமெரிக்காவில் ஜெபக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பரிதாப பலி!

அமெரிக்காவில், பிட்ஸ்பர்க் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பரிதாபமாக பலியாயினர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ளது பிட்ஸ்பர்க் நகரம். இங்குள்ள யூத ஜெபக்கூடத்தில் நேற்று ஏராளமானோர் கூடியி ருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார். இதையடுத்து கூட்டத்தினர் அலறி அடித்தபடி சிதறி ஓடினர். இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பரிதாபமாகப் பலியாயினர். 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சிலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதையடுத்து அந்த மர்ம நபரை போலீசார் தேடினர். அவர் மீது தாக்குதல் நடத்தினர். அவரும் பதிலுக்கு சுட்டதில் போலீஸ் அதிகாரிகள் மீதும் குண்டு பாய்ந்தது. பின்னர் அந்த மர்மநபரை சுட்டு, போலீசார் மடக்கி பிடித்தனர்.

காயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பெயர் ராபர்ட் போவர்ஸ் என்பது தெரியவந்துள்ளது. என்ன நோக்கத்துக்காக இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார் என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இந்த துப்பாக்கிச்சுடு சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது கொடூரமான சம்பவம் எனக் குறிப்பிட்டுள் ள அவர், அங்கு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். 

சமீபகாலமாக இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் அதிகமாக நடந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com