பிலிப்பைன்ஸ் நாட்டில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 37 பேர் பலியாயினர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸில் உள்ள டாவோ (Davao) நகரில் பிரமாண்ட வணிக வளாகம் ஒன்று உள்ளது. இதன் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இந்த விபத்தில் 37 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடந்துவருகிறது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.