பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் - பென்டகன் வலியுறுத்தல்

பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் - பென்டகன் வலியுறுத்தல்

பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் - பென்டகன் வலியுறுத்தல்
Published on

டோகோலாம் விவகாரத்தில் இந்தியா, சீனா நாடுகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என பென்டகன் கூறியுள்ளது.

இந்தியாவின் சிக்கிம் மாநில எல்லை, சீனா மற்றும் பூடானுக்கு இடையே உள்ள, டோகோலாம் பகுதியில், சாலை அமைக்கும் பணிகளை, சீனா துவங்கியது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, அந்தப் பணிகளை, நம் ராணுவம் தடுத்து நிறுத்தியது. இரண்டு நாட்டு ராணுவமும், அங்கு குவிக்கப்பட்டுள்ளதால், எல்லையில் ஒரு மாதத்துக்கும் மேலாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதுகுறித்து பென்டகன் செய்தி தொடர்பாளர் கேரி ராஸ் அளித்த பேட்டியில் " இந்தியா சீனா நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றத்தை குறைக்க இரு நாடுகளும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் மேலும் தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட இரு நாடுகளுக்கு தான் தெரியும். இந்த விவகாரத்தில் யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாங்கள் ஊக்குவிக்கிறோம்" இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com