43 பேருடன் ஏரிக்குள் பாய்ந்த விமானம்.. தான்ஸானியாவில் நிகழ்ந்த பயங்கர விபத்து!

43 பேருடன் ஏரிக்குள் பாய்ந்த விமானம்.. தான்ஸானியாவில் நிகழ்ந்த பயங்கர விபத்து!
43 பேருடன் ஏரிக்குள் பாய்ந்த விமானம்.. தான்ஸானியாவில் நிகழ்ந்த பயங்கர விபத்து!

பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை தான்ஸானியாவில் உள்ள லேக் விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஏரிக்கு அருகில் இருக்கும் புக்கோபா விமானநிலையத்தில் தரையிறங்க முயற்சி செய்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஏரியில் விழுந்த விமானமானது தான்ஸானியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான ப்ரிசிஷன் ஏர்-க்கு சொந்தமானதாகும்.

விமானத்தில் பயணிகள் 39 பேர், 2 பைலட்கள் மற்றும் 2 கேபின் க்ரூ பணியாளர்கள் என மொத்தம் 43 பேர் இருந்திருக்கின்றனர். சூறாவளிக் காற்று வீசியதாலும், கனமழை பெய்து கொண்டிருந்ததாலும் விமானிகளால் விமானத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

விமானம் முழுவதுமாக நீரில் மூழ்கியிருப்பதும், அதன் வால் பகுதி மட்டும் வெளியே தெரிவதைப் போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. விமானநிலையத்திலிருந்து வெறும் 100 மீட்டர் தூரத்தில் இந்த விபத்து நடந்திருக்கிறது.

உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கியதாகவும் 26 பேர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் புக்கோபா பகுதியின் ஆணையர் ஆல்பர்ட் சால்மிலா தெரிவித்துள்ளார்.

“ விமான விபத்து செய்தியைக் கேட்டு வருத்தமுற்றேன். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொறுமையாக இருப்போம் கடவுள் நமக்கு உதவி செய்வார் ” என தான்ஸானியா அதிபர் ஷாமியா சுலுஹு ஹாஸன் செய்தி வெளியிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com