"தயவுசெய்து வாருங்கள்.." சர்வதேச நாடுகளை அழைத்த பாலஸ்தீன அரசு!

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு பாலஸ்தீனம் அழைப்பு விடுத்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் போர் உச்சகட்டத்தை தொட்டுள்ளது. இரு தரப்பில் இருந்தும் மேற்கொள்ளப்படும் மூர்க்கமான தாக்குதலால் அப்பாவி பொதுமக்களும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். போரில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்
பதற்றம்: இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம்!

இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு பாலஸ்தீனம் அழைப்பு விடுத்துள்ளது. காஸா நகரில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளது. போர் உக்கிரமடையும் நிலையில் காஸாவில் மின் உற்பத்தி தடைசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்குள்ள மக்கள் உணவின்றி, தண்ணீர்கூட இன்றி தவித்து வருகின்றனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்
தொடர் குண்டுமழை .. இடைவிடாது தாக்கும் இஸ்ரேல்.. ஹமாஸின் இறுதிக்காலமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com