"பயங்கரவாத ஆதரவை பாக்., நிறுத்திக்கொள்ள வேண்டும்" - கமலா ஹாரிஸ் வலியுறுத்தல்

"பயங்கரவாத ஆதரவை பாக்., நிறுத்திக்கொள்ள வேண்டும்" - கமலா ஹாரிஸ் வலியுறுத்தல்
"பயங்கரவாத ஆதரவை பாக்., நிறுத்திக்கொள்ள வேண்டும்" - கமலா ஹாரிஸ் வலியுறுத்தல்

பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தருவதை பாகிஸ்தான் அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

வாஷிங்டனில் பிரதமர் மோடியை துணை அதிபர் கமலா ஹாரிஸ் சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இச்சந்திப்பில் பேசப்பட்டவை குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா செய்தியாளர்களிடம் விளக்கினார். மோடியுடனான சந்திப்பின் போது பாகிஸ்தான் விவகாரத்தை கமலா ஹாரிஸ் தாமாக முன்வந்து எழுப்பியதாக வெளியுறவுத்துறை செயலாளர் கூறியுள்ளார்.

இந்தியாவும் அமெரிக்காவும் பாதிக்கப்படுவதை தடுக்க பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தருவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என கமலா ஹாரிஸ் கூறியதாகவும் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில், ஹக்கானி நெட்வொர்க் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஊக்கம் அளிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் தாமாக முன்வந்து பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com