பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரமீஸ் ராஜா நியமனம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரமீஸ் ராஜா நியமனம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரமீஸ் ராஜா நியமனம்?
Published on
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரமீஸ் ராஜாவை நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள இசான் மணியின் பதவிக்காலம் நாளையுடன் (ஆக.25) முடிவடைகிறது. அவரது பதவிக் காலத்தை நீட்டிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை புரவலரும், அந்த நாட்டின் பிரதமருமான இம்ரான் கான் விரும்பவில்லை. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார்.
நேற்று பிரதமர் அலுவலகத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவர் இசான் மணி மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா ஆகிய இருவரும் பிரதமர் இம்ரான் கானுடன் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரமீஸ் ராஜாவை நியமிக்கும்படி பிரதமர் இம்ரான் கான் முன்மொழிந்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக வாய்ப்புள்ள பட்டியலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஜித் கானின் பெயரும் அடிபட்டிருந்தது. ஆனால் மஜித் கான், பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய உறவினர் என்பதால், தான் அப்பதவியை ஏற்க விரும்பவில்லை எனத் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் தனது குடும்பத்துடன் எப்போதும் நல்ல உறவு வைத்திருக்கும் ரமீஸ் ராஜாவுக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக மஜித் கான் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com