உலகம்
பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் பாகிஸ்தான் மக்கள் அவதி
பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் பாகிஸ்தான் மக்கள் அவதி
பாகிஸ்தானில் எரிபொருள் டேங்கர் ஊழியர்கள் 3வது நாளாக போராட்டம் நடத்தி வருவதால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சில வாரங்களுக்கு முன் பெட்ரோல் டேங்கர் வெடித்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை, பாகிஸ்தான் எண்ணெய் ஒழுங்குமுறை ஆணையம் கடுமையாக்கியது. ஆனால், இதற்கு பாகிஸ்தான் எரிபொருள் டேங்கர் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இருதரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இப்பிரச்னையை விரைவில் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

