பாக்.முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கான் 3-வது திருமணம்!

பாக்.முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கான் 3-வது திருமணம்!
பாக்.முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கான் 3-வது திருமணம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தெஹ்ரீக் ஈ இன்சாப் என்ற கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மூன்றாவது முறையாக நேற்று திருமணம் செய்துகொண்டார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் இம்ரான் கான். இவர் தலைமையிலான அணி, 1992ம் ஆண்டு உலக கோப்பையை வென்றது. கிரிக்கெட்டில் இருந்து விலகிய பின் பாகிஸ்தான் தெஹ்ரீக் ஈ இன்சாப் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார் இம்ரான் கான். இவர், 1995-ல் இங்கிலாந்து கோடீஸ்வர் மகளான ஜெமிமா கோல்ட்ஸ்மித்தை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பின் விவாகரத்து பெற்றனர். 2015ம் ஆண்டில் தொலைக்காட்சி தொகுப்பாளர் ரேஹாம் கான் என்பவரை திருமணம் செய்தார். இந்த திருமணம் பத்தே மாதங்களில் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் அவர் மூன்றாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அதை மறுத்தார் இம்ரான். 

இந்நிலையில் புஷ்ரா மேனகா (40) என்பவரை நேற்று திருமணம் செய்துகொண்டார். இவரிடம் ஆன்மிக ஆலோசனை பெற கடந்த சில வருடங்களுக்கு முன் சென்றார் இம்ரான் கான். இதைத் தொடர்ந்து இவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். புஷ்ராவுக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ளனர். எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் கானின் சகோதரிகள் கலந்துகொள்ளவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com