அதிக எடை கொண்ட பாக். மனிதர் மருத்துவமனையில் அனுமதி

அதிக எடை கொண்ட பாக். மனிதர் மருத்துவமனையில் அனுமதி
அதிக எடை கொண்ட பாக். மனிதர் மருத்துவமனையில் அனுமதி

பாகிஸ்தான் நாட்டின் மிக அதிகமான எடை கொண்ட நபரான நூர் ஹாசன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியை சேர்ந்தவர் நூர் ஹாசன். இவரின் உடல் எடை 330 கிலோவாக இருந்து வருகிறது. இந்த அதிக உடல் எடையால் இவர் நடப்பதற்குகூட சிரமப்பட்டு வருகிறார். இத்துடன் உடல் நலக் குறைவாலும் இவர் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனைக்குச் செல்ல அரசிடம் உதவி கேட்டுள்ளார்.


 
இந்நிலையில் இவருக்கு உதவ ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றும் ஒரு சிறப்பு படையும் அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. நூர் ஹசன் அதிக எடையுடன் இருப்பதால் அவரால் வீட்டை விட்டு வெளியில் வர முடியவில்லை. எனவே இந்தச் சிறப்பு படையினர் நூர் ஹசனின் வீட்டு சுவர் மற்றும் கதவு ஆகியவற்றை உடைத்தனர். இதனைத் தொடர்ந்து அவர் லாகூரிலுள்ள மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு லாப்ரோஸ்கோபி சிகிச்சை மற்றும் பிற உடல் நல குறைவு சிகிச்சை ஆகியவை செய்யப்படவுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பாகிஸ்தானிலுள்ள மக்களின் உடல் எடை குறித்த கடந்த ஆண்டு ஆய்வு வெளிவந்தது. அதில் 29 சதவிகித பாகிஸ்தான் மக்கள் உடல் எடை அதிகமாக இருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இவர்களில் 51 சதவிகிதம் பேர் உடல் பருமனுடன் காணப்படுகிறார்கள் என்றும் இந்த ஆய்வு கூறியது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com