\
காதலியை கொன்ற வழக்கில் தடகள வீரருக்கு 13 ஆண்டுகள் சிறை

காதலியை கொன்ற வழக்கில் தடகள வீரருக்கு 13 ஆண்டுகள் சிறை

காதலியை கொன்ற வழக்கில் தடகள வீரருக்கு 13 ஆண்டுகள் சிறை
Published on

காதலியைக் கொன்ற வழக்கில், மாற்றுத் திறனாளி தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்-க்கு ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்த ‌சிறைதண்டனை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு தனது காதலியை சுட்டுக் கொன்றதற்காக தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்-க்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பிஸ்டோரியஸ்-க்கு 6 ஆண்டுகள் என்பது குறைவான தண்டனை என்பதால், 15 ஆண்டுகள் தண்டனை விதிக்குமாறு அரசு தரப்பில் தென்னாப்ரிக்க உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், ஆஸ்கர் பிஸ்டோரியஸ்-க்கான சிறை தண்டனையை 13 வருடங்கள் 5 மா‌தங்கள் என உயர்த்தி உத்தரவிட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com