உலகின் இரும்புத்திரையாக இருக்கும் வடகொரிய நாட்டில் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டதால் இறைச்சிக்காக வளர்ப்புநாய்களை ஒப்படைக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது, அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
கடந்த ஜூலை மாதம் இதற்கான உத்தரவை வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்திருந்தார். மேலும், அவர் ’வீட்டில் நாய் வளர்ப்பது சட்டத்துக்கு எதிரானது. முதலாளித்துவ சித்தாந்தத்தின் கறைபடிந்த போக்கு’ என்றார்.
அதனால், தற்போது வடகொரியாவில் வளர்ப்பு நாய்கள் இருக்கும் வீடுகளை கண்டுபிடித்து அரசு அதிகாரிகள் கைப்பற்றி அரசு உயிரியல் பூங்காக்களுக்கும் நாய் இறைச்சிக்கூடங்களுக்கும் அனுப்பி வைக்கிறார்கள். வடகொரியாவில் 25.5 மில்லியன் மக்களில் 60 சதவீதத்தினர் பரவலாக உணவுப்பற்றாக்குறைய எதிர்கொள்கிறார்கள் என்று ஐநாவின் சமீபத்திய அறிக்கை ஒன்று கூறியது. இதனால், கிம் ஜாங் உன் பொதுமக்களிடம் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்துவருகிறார்.