ஜெர்மனி டூ எகிப்து: சரக்கு கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து - ஒருவர் பலி

நெதர்லாந்து கடற்பகுதியில் சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார்.

ஜெர்மனியில் இருந்து எகிப்து நாட்டிற்கு சென்று கொண்டிருந்த தனியார் சரக்கு கப்பலில் 500 மின்சார கார்கள் உட்பட 3783 வாகனங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் கப்பல் குழுவைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கப்பலில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் இரண்டாவது நாளாக கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com