உக்ரைனில் கட்டுப்பாடு இல்லாமல் காரில் வேகமாகச் சென்று 6 பேர் பலியானதற்கு காரணமான இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
உக்ரைனில் கட்டுப்பாடு இல்லாமல் வேகமாக சென்ற கார் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். கர்கிவ் நகரில் சிக்னலில் நிற்காத அந்த கார் வேகமாக சென்று மற்றொரு காருடன் மோதியது. அப்போதும் நிற்காத அந்த கார் சாலையோரத்தில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்து கவிழந்தது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். விதிகளை மீறி அந்த காரை ஓட்டி வந்த 20 வயது இளம் பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.