கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஸ்கால்ஸின் இடது சோஷியல் ஜனநாயக கட்சி பெரும்பான்மை பலம் பெற்றது. எனினும் கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடித்துவந்தது. தற்போது பேச்சுவார்த்தைகள் முடிந்ததை அடுத்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மெர்க்ல் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் ஸ்கால்ஸ் நிதியமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.