வட கொரிய அதிபர் கிம் ஜாங் மேற்பார்வையில் அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகள்!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் மேற்பார்வையில் அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகள்!
வட கொரிய அதிபர் கிம் ஜாங் மேற்பார்வையில் அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகள்!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. தென்கொரியாவில் அந்த நாட்டின் கடற்படை அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

கொரிய எல்லையில் நடந்து வரும் இந்த போர்ப்பயிற்சியை வடகொரியா கடுமையாக எதிர்த்தது வருகிறது. மேலும் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா கடந்த 2 வாரங்களாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து 2 குறுகிய தொலைவு 'பாலிஸ்டிக்' ரக ஏவுகணைகளை சோதித்தது. 2 வாரங்களில் வடகொரியா நடத்திய 7-வது ஏவுகணை சோதனை இதுவாகும்.

இந்த ஏழு ஏவுகணைகள் அனைத்தும் "தந்திரோபாய அணுசக்தி" பயிற்சிகள் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன, அவை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னால் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com