சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி - மீண்டும் வெளியே வந்த கிம் ஜாங் உன்

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி - மீண்டும் வெளியே வந்த கிம் ஜாங் உன்
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி - மீண்டும் வெளியே வந்த கிம் ஜாங் உன்


வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய வந்தநிலையில் மீண்டும் பொதுவெளிக்கு வந்து அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

கிம் ஜாங் உன், கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதியிலிருந்து பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் இருந்தார். இதனையடுத்து அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவரது உடல்நிலை மிக மோசமடைந்து உயிருக்குப் போராடி வருவதாகவும் தகவல்கள் பரவின. இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த மே 1 ஆம் தேதி அன்று தொழிற்சாலை திறப்பு விழா ஒன்றில் அவர் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின.

இந்தப் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள், கிம்மின் உடல் எடை உள்ளிட்ட சில விஷயங்களை விமர்சனம் செய்தனர். இதனையடுத்து விளக்கம் அளித்த அந்நாட்டு உளவுத்துறை கிம்முக்கு அறுவைச் சிகிச்சை செய்ததற்கான அறிகுறிகள் இல்லை என்றும் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் வதந்தியே என்றும் தெரிவித்தது.

ஆனால் அதன் பின்னர் கிம் ஜாங் உன் கடந்த 20 நாள்களாக எந்த நிகழ்விலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தற்போது அவர் அணுசக்தி துறைகளை மேம்படுத்துவது குறித்தும், ராணுவத்துறையை அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வைப்பது குறித்தும் அதிகாரிகளுடன் கலைந்துரையாடியதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து வடகொரிய ஊடகம் வெளியிட்டுள்ளச் செய்தியில் இந்தக் கலந்துரையாடலில் அணுசக்தி துறையை மேம்படுத்துவதற்கு புதிய கொள்கைகள் உருவாக்கப்பட்டதாகவும், வெளிநாடுகளிலிருந்து வடகொரிய நாட்டை பாதுகாக்க ராணுவத்துறையை எப்படி அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வைப்பது குறித்தும் பேசப்பட்டதாகவும் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com