கடந்த 7 நாட்களில் 57 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு

கடந்த 7 நாட்களில் 57 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு
கடந்த 7 நாட்களில் 57 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும் கடந்த 7 நாட்களில் சுமார் 57 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 7 நாட்களாக இந்தியாவின் தினசரி பாதிப்பு சராசரியாக 3 லட்சத்திற்கு மேல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக அளவில் தொடர்ச்சியாக 9வது வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதே நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக உலக பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதிலும் உலகளவில் தெற்காசிய பகுதியில் அதிக பாதிப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் உருமாறிய கொரோனாவும் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என சொல்லப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com