ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களுக்கு காவல் நீடிப்பு: மியான்மர் நீதிமன்றம் உத்தரவு

ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களுக்கு காவல் நீடிப்பு: மியான்மர் நீதிமன்றம் உத்தரவு
ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களுக்கு காவல் நீடிப்பு: மியான்மர் நீதிமன்றம் உத்தரவு

மியான்மரில் கைது செய்யப்பட்ட ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் இருவருக்கும் மேலும் 14 நாட்கள் காவலை நீடித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மியான்மரின் பாதுாப்பு விதிகளை மீறி செய்தி சேகரித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இரண்டு செய்தியாளர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் விசாரணைக்காக அவர்கள் இருவரும் நேற்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது குடும்பத்தினரை சந்திப்பதற்கு அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சிறையில் தங்களை அதிகாரிகள் துன்புறுத்தவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். ‌அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com