\
குட்டியை மீட்க முதலையிடம் தானாக சென்று சிக்கிய தாய் மான்: மனதை உருக்கும் வீடியோ

குட்டியை மீட்க முதலையிடம் தானாக சென்று சிக்கிய தாய் மான்: மனதை உருக்கும் வீடியோ

குட்டியை மீட்க முதலையிடம் தானாக சென்று சிக்கிய தாய் மான்: மனதை உருக்கும் வீடியோ
Published on

தாய் மான் ஒன்று தனது குட்டி மானை முதலையிடம் இருந்து காப்பாற்ற ஆற்றில் முந்திச்சென்று தானாக மாட்டிக்கொள்ளும் வீடியோ ஒன்று வைரல் ஆகியுள்ளது. தாய் மானின் பாசம் பலரையும் நெகிழ வைத்துவிட்டது.

உலக உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான உணர்வு தாய்பாசம். அத்தகைய உன்னத உணர்வை வெளிப்படுத்தும் விதமாக ‘I didn’t know that on twitter’ என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகள் நெஞ்சை உறைய வைக்கும் விதமாக உள்ளது.

அந்த வீடியோவில், ’ஆற்றில் பயமறியாத மான் குட்டி ஒன்று நீந்தி வருகிறது. அதனைத் தாக்கி விழுங்க ஒருப்பக்கம் முதலை ஒன்று ஆவேசமாக பாய்ந்து வருகிறது. இதனைப் பார்த்த கரையில் இருந்த தாய் மான் அவசர அவசரமாக ஆற்றில் பாய்ந்து மான் குட்டியை முந்திச் சென்று முதலையின் வாயில் சிக்கிக்கொள்கிறது. குட்டி மான் பாதுகாப்பாக கரையை சேர்கிறது.

சோகத்தையும் தாயின் பாசத்தையும் உணர்த்தும் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து இதுதான் தாய் பாசம் என்று பலரும் பகிர்ந்து வருகிறார்கள். உலகில் தாய் பாசத்திற்கு ஈடு இணை வேறெதுவும் கிடையாது என்பதை தாய் மானின் செயல் காட்டுவது போல் உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com