எகிப்து: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

எகிப்து: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
எகிப்து: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர் படுகாயமடைந்தனர்.

கெய்ரோவில் இருந்து நைல் டெல்டா பகுதிக்கு ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த ரயில் விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கினர். 10க்கும் அதிகமானோர் சடலமாக மீட்கப்பட்டனர். படுகாயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள 3 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

எகிப்தில் கடந்த மாதம், இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். சுமார் 200 பேர் காயமடைந்திருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com