"தைரியமாக இருங்கள்" உக்ரைனில் இருக்கும் மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்

"தைரியமாக இருங்கள்" உக்ரைனில் இருக்கும் மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்
"தைரியமாக இருங்கள்" உக்ரைனில் இருக்கும் மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்

“திருவாரூர் மாவட்டத்தில் இருந்து உக்ரைன் நாட்டிற்கு படிக்க சென்று, தற்போது போரினால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அங்கு வாழக்கூடிய இந்தியர்களை மீட்டெடுக்க தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், இதற்காக மத்திய மாநில அரசுகளுடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாகவும் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா பகுதியை சேர்ந்த அபிராமி என்பவர், தற்போது ரஷ்யா எல்லைக்கு அருகிலுள்ள கார்க்யூ பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளார். அவரைப்போல 50க்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் மற்றும் பல இந்தியர்கள் அங்கு மாட்டிக்கொண்டுள்ளார்கள் என தகவலறிந்த முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், நேரடியாக அபிராமி வீட்டிற்கு சென்று அவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அதன்பிறகு அபிராமியிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர், “கவலைப்படாமல் இருங்கள். உங்களை இந்தியா கொண்டுவருவதற்கான வேலைகளை தொடர்ந்து நான் செய்து வருகிறேன். ஆகவே நீங்கள் தைரியமாக இருங்கள்” என தொலைபேசியில் பேசினார்.

மேலும் அவர்களுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களிடம், “மத்திய மாநில அரசிடம் உங்களுக்காக தொடர்ந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க, நான் தொடர்ந்து முயற்சித்து வருகிறேன் நம் மாவட்டத்தில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக வருவார்கள்” என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், “ஒட்டுமொத்தமாக அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு எடுக்க மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறது. ஆகவே அனைவரும் பத்திரமாக வருவார்கள்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com