சுவருக்கான செலவை ஏற்க முடியாது: ட்ரம்புக்கு மெக்சிகோ அதிபர் பதிலடி

சுவருக்கான செலவை ஏற்க முடியாது: ட்ரம்புக்கு மெக்சிகோ அதிபர் பதிலடி

சுவருக்கான செலவை ஏற்க முடியாது: ட்ரம்புக்கு மெக்சிகோ அதிபர் பதிலடி
Published on

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவுப்படி எல்லைச் சுவர் கட்டுவதற்கான செலவை ஏற்‌க முடியாது என மெக்சிகோ அதிபர் பீனா நீட்டோ அறிவித்திருக்கிறார்.

மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்‌டுள்ளார். 3 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்தச் சுவர் கட்டப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். சட்டவிரோதமாக மக்கள் எல்லையைத் தாண்டுவதைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பைத் ‌‌தீவிரப்படுத்தவும் அவர் உத்தரவிட்டிருக்கிறார். இது தொடர்பான உத்தரவுகளில் அவர் நேற்று கையெழுத்திட்டார்.

எல்லையில்லாத நாடு, ஒரு நாடாகவே இருக்க முடியாது எனக் கூறிய அவர், அமெரிக்காவின் எல்லையை மீட்பதே தனது முக்கியப் பணியாக இருக்கும் என்று கூறினார். இந்த எல்லைச் சுவரைக் கட்டுவதற்கு ஆகும் செலவை மெக்சிகோவே ஏற்க வேண்டும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சுவர் கட்டுவதற்கான செலவை ஏற்‌க முடியாது என மெக்சிகோ அதிபர் பீனா நீட்டோ அறிவித்திருக்கிறார். ட்ரம்பின் உத்தரவு தொடர்பாக வெளியுறவுத் துறையுடன் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மெக்சிகோ தூதரங்களே, புலம்பெயர்வோரின் உரிமைகளைக் காக்கும் அமைப்புகளாகச் செயல்படும் என்றும் பீனா நீட்டோ தெரிவித்துளளார்.

புலம் பெயர்வோருக்கு உரிய சட்ட ஆலோசனைகளையும், உறுதியையும் மெக்சிகோ அரசு அளிக்கும் என்றும் அவர் கூறினார். சுவர்கள் மீது மெக்சிகோவுக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்த அவர், ஒருகாலத்திலும் அதற்கான செலவை ஏற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். அமெரிக்காவுடன் நட்புணர்வையே மெக்சிகோ விரும்புகிறது எனவும் பீனா நீட்டோ குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com