லைகா ஸ்பெயின் தொலைத்தொடர்பு நிறுவனத்தை ரூ.3,100 கோடிக்கு வாங்கியது மாஸ்மோவில்..!

லைகா ஸ்பெயின் தொலைத்தொடர்பு நிறுவனத்தை ரூ.3,100 கோடிக்கு வாங்கியது மாஸ்மோவில்..!

லைகா ஸ்பெயின் தொலைத்தொடர்பு நிறுவனத்தை ரூ.3,100 கோடிக்கு வாங்கியது மாஸ்மோவில்..!
Published on

ஸ்பெயினின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான மாஸ்மோவில், லைகாவின் ஸ்பெயின் தொலைத்தொடர்பு நிறுவனத்தை ரூ.3,100 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச அளவில் 23 நாடுகளில் தொலைத்தொடர்பு சேவைகளில் முக்கிய பங்காற்றுகிறது லைகா நிறுவனம்(lycamobilenetwork). கடந்த 2010-ம் ஆண்டு ஸ்பெயினில் தன் வர்த்தகத்தை தொடங்கிய லைகா, 1.5 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்நிலையில் தன்னுடைய 100% பங்குகளையும் லைகா ஸ்பெயின் தொலைத்தொடர்பு நிறுவனம், ஸ்பெயினின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான மாஸ்மோவிலிடம் விற்பனை செய்துள்ளது.

அதன்படி இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3,100 கோடி விலைக்கு லைகா ஸ்பெயின் தொலைத்தொடர்பு நிறுவனத்தை மாஸ்மோவில் வாங்கியுள்ளது. நிறுவனத்தை விலைக்கு வாங்கினாலும், இன்னும் சில வருடங்களுக்கு லைக்காவின் பெயலேயே அதன் தொலைதொடர்பு இயங்கும் என மாஸ்மோவில் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள லைகா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான கலாநிதி அல்லி ராஜா சுபாஸ்கரன், “ நாங்கள் ஸ்பெயினுக்குள் நுழைந்தபோது, உயர்தரமான, குறைந்த கட்டணத்திலான தொலைத் தொடர்புச் சேவையைக் கொடுக்க வேண்டுமென்று கனவு கண்டோம். தற்போது அந்தக் கனவு நனவாகி உள்ளது. இந்தப் பணியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com