8 விநாடிகள் கொரோனா விதிமுறைகளை மீறியதால் ஒரு லட்சம் டாலர்கள் அபராதம் விதித்த தைவான் அரசு!

8 விநாடிகள் கொரோனா விதிமுறைகளை மீறியதால் ஒரு லட்சம் டாலர்கள் அபராதம் விதித்த தைவான் அரசு!

8 விநாடிகள் கொரோனா விதிமுறைகளை மீறியதால் ஒரு லட்சம் டாலர்கள் அபராதம் விதித்த தைவான் அரசு!
Published on

தைவான் நாட்டில் கொரோனாவுக்காக 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருந்த நபர், அறையை விட்டு வெளியே வந்ததால் அவருக்கு அந்நாட்டு மதிப்பில் ஒரு லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி தைவான் நாட்டில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அவர் கொரோனா பரவல் காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டார். இதற்காக அவர் தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டார். அவர் அறையை விட்டு வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த நபர் அனுமதியை மீறி வெளியே வந்ததோடு மட்டுமல்லாமல், ஏதோ ஒன்றை அருகில் இருந்த மற்றொரு நோயாளியின் அறைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த மேசையில் வைத்தார். அவரது இந்த நடவடிக்கை அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமாராக்களில் பதிவானது. இந்தக் காட்சிகளின் அடிப்படையில், அவர் 8 விநாடிகள் அறையை விட்டு வெளியே இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுத்த தைவான் அரசு, அவருக்கு அந்நாட்டின் மதிப்புப்படி 1 லட்சம் டாலர்கள் அபராதம் விதித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு 2.65 லட்சம் ஆகும். கொரோனா பரவல் காரணமாக தைவான் நாட்டில், கண்டிப்புடன் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com