’பாம் வச்சிருக்கேன்...’- விமானத்தில் பீதி கிளப்பிய இளைஞர்!

’பாம் வச்சிருக்கேன்...’- விமானத்தில் பீதி கிளப்பிய இளைஞர்!
’பாம் வச்சிருக்கேன்...’- விமானத்தில் பீதி கிளப்பிய இளைஞர்!

விமானத்தை வெடிக்க வைக்கப்போவதாக பீதி கிளப்பிய இலங்கை இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு எம்.எச் 128 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று நள்ளிரவு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பயணி ஒருவர் திடீரென எழுந்து, ’வெடிகுண்டுகள் வச்சிருக்கேன். விமானத்தை வெடிக்க வைக்கப் போறேன்’ என்று கூறிய விமானிகள் அறையான காக்பிட்டுக்குள் நுழைய முற்பட்டார். இதனால் பீதி அடைந்த பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் அவரை பிடித்து இழுத்தனர். பின்னர் அவரின் கைகளை கட்டி, இருக்கையின் அடியில் தள்ளினர்.  
இதையடுத்து விமானம் மெல்போர்ன் விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. அங்கு தயாராக இருந்த காவல்துறையினர் மிரட்டிய நபரை பிடித்துச்சென்று விசாரணை நடத்தினர். 
அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்தது. இதையடுத்து விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் மெல்போர்ன் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com