யாழ்ப்பான பயணத்துக்கு யெஸ், கந்தரோடை விகாரைக்கு நோ - பதுங்கிய ராஜபக்சே

யாழ்ப்பான பயணத்துக்கு யெஸ், கந்தரோடை விகாரைக்கு நோ - பதுங்கிய ராஜபக்சே
யாழ்ப்பான பயணத்துக்கு யெஸ், கந்தரோடை விகாரைக்கு நோ - பதுங்கிய ராஜபக்சே

இலங்கை யாழ்பாணத்தில் கந்தரோடை விகாரைக்கு செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு செல்வதை அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர்த்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச இரண்டு நாட்கள் பயணமாக நேற்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார். தொடர்ந்து அங்குள்ள மத வழிபாட்டு தலங்களில் சென்ற அவர், யாழ்ப்பாணம் கந்தரோடை விகாரைக்கும் சென்று வழிபட திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், கந்தரோடை விகாரையில் புதிய கட்டடங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்ட இருப்பதாக செய்தி வெளியானதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கந்தரோடை விகாரைக்கு செல்வதை அவர் தவிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com