லண்டனில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மறந்து வணிக வளாகம் முன்பு குவிந்த மக்கள்

லண்டனில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மறந்து வணிக வளாகம் முன்பு குவிந்த மக்கள்
லண்டனில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மறந்து வணிக வளாகம் முன்பு குவிந்த மக்கள்

லண்டனில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள வணிக வளாகம் முன்பு ஏராளமான மக்கள் பொருட்களை வாங்க குவிந்தனர்.

இங்கிலாந்து அரசு கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் அனைவரும் ஒன்றரை மீட்டர் தூரம் இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், பல் பொருள் அங்காடிகள் போன்றவற்றிற்கும் அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள பெரும்பாலான கடைகள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட ஆர்டர்களை மூன்று வாரங்களுக்கும் மேலாக விநியோகிக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறான சூழல்களில் அடிப்படை உணவு தேவைகளுக்கான பொருட்களை வாங்க அங்குள்ள வணிக வளாகம் ஒன்றின் முன்பு ஏராளமான மக்கள் குவிந்தனர். கூட்டம் அதிகரிக்கவே மக்கள் சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை கடைபிடிக்க மறந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com