லண்டனில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல்: 6 பேர் பலி!

லண்டனில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல்: 6 பேர் பலி!

லண்டனில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல்: 6 பேர் பலி!
Published on

லண்டனில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். 
லண்டன் பாலம் அருகே பாதசாரிகள் நடக்கும் பகுதியில் வாகனம் ஒன்றை வேகமாக தீவிரவாதிகள் ஓட்டி வந்தனர். இதனால் மக்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர் வாகனத்தில் இருந்து இறங்கிய தீவிரவாதிகள், பாரோ மார்க்கெட் பகுதியில் வருவோர் போவோரை ஆயுதங்களால் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் 6 பேர் பலியாயினர். சுமார் 30 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தீவிரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மூன்று தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். மார்ச் மாதம் வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தின் மீது மோதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைப் போல மீண்டும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 
இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com